Mnadu News

சின்மயிக்கு தமிழ் படங்களில் பணியாற்ற தடையில்லை – உயர்நீதிமன்றம்

கடந்த ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘மீடூ’ இயக்கத்தில் பாடகி சின்மயி சில பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை முன்வைத்தார். இதையடுத்து, நடிகர் ராதாரவி தலைவராக பதவி வகித்த டப்பிங் யூனியனில் இருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டார். இந்நிலையில், டப்பிங் யூனியன் தனக்கு விதித்த தடையை எதிர்த்து பாடகி சின்மயி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துயிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சின்மயி மீது டப்பிங் யூனியன் விதித்த தடைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் சின்மயி டப்பிங் யூனியனில் பணியாற்றலாம்.

Share this post with your friends