தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 38ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தினார்
இந்நிகழ்ச்சியில், அமைப்புச் செயலாளர் வந்தியதேவன், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன், மாவட்டச் செயலாளர்கள் சிவகங்கை புலவர் செவந்தியப்பன், வடசென்னை கிழக்கு -சு.ஜீவன், தென்சென்னை கிழக்கு – கே.கழககுமார், தென்சென்னை மேற்கு -வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி, காஞ்சிபுரம் வடக்கு மாவை.மகேந்திரன் மற்றும் எழும்பூர் பகுதி தென்றல் நிசார், சூளைமேடு குமார், அண்ணாநகர் இராம.அழகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.