பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றைத் மையமாக வைத்து ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற தலைப்பில் திரைபடம் உருவானது. இந்த படம் மக்களவைத் தேர்தல் சமயத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தனது முடிவை மாற்றிக் கொள்ளாததால், படம் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், வரும் 24ம் தேதி ‘பி.எம்.நரேந்திரமோடி’ படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.