‘மூடர் கூடம்’ இயக்குனர் நவீன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இந்த படத்திற்கு ஃப்ளாஷ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சொர்ணா சேதுராமன் தடை கோரியுள்ளார்.
அதில், விசாகனை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க நவீனை நாடியதாகவும். அதற்கு முன்பணமாக ரூ.50 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு படம் இயக்காமல் தாமதித்து வருவதாகவும். தன்னிடம் பெற்ற பணத்தை வழங்கிவிட்டு ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தை திரையிட வேண்டும் என்று ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்திற்கு தடை கோரியுள்ளார்.
சொர்ணா சேதுராமன், சௌந்தர்யா ரஜினிகாந்தின் கணவர் விசாகனின் தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது.