Mnadu News

காலணிகள் விற்பனை கடையில் சட்டவிரோத மது விற்பனை என புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் அரசுப் பள்ளிக்கு அருகிலேயே காலணிகள் விற்கும் கடை ஒன்றில் வைத்து, சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 25 அடி தூரத்தில் அமைந்துள்ள அந்தக் கடையின் உரிமையாளர் சேகர், அரசியல் கட்சி ஒன்றின் நிர்வாகியாக உள்ளார் என்று கூறப்படுகிறது.

இங்கு 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது என்றும் புகார் அளித்தாலும் காவல்துறையோ, கலால்துறையோ கண்டுகொள்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சட்டவிரோதமாக நடைபெறும் இந்த மதுவிற்பனையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this post with your friends