நாம் காணும் இடங்களில் எல்லாம் குப்பைத் தொட்டிகள் வைத்தாலும் குப்பைகளை வீசி எறியும் பழக்கம்தான் பலருக்கும் இருக்கிறது. அவர்களுக்கு தக்க பதில் கொடுக்கும் விதமாக இருக்கிறது இந்த வீடியோ.மக்கும் , மக்காத பொருட்கள் என தனித்தனியே பிரித்து வைப்பதற்கான நோக்கம் சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காகவே. ஆனாலும் சிலர் அதை சிறிதும் கவனிக்காமல் அப்படியே குப்பைகளை வீசி எறிவார்கள். இதுபோன்ற காரணங்களால்தான் இந்த பூமியின் அழிவு காலம் நெருங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
If they can,
We all can👍🏻 pic.twitter.com/JDtIxWKAqZ— Susanta Nanda IFS (@susantananda3) August 22, 2019
குறிப்பாக பிளாஸ்டிக் மாசுபாடு பூமிக்கு மட்டுமல்ல வாழும் உயிரினங்களுக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. அது தெரிந்தும் பயன்படுத்தக்கூடிய சூழல்தான் நிலவி வருகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பை தற்போது முழு வீச்சில் செயல்படுத்தி வந்தாலும் அது முற்றிலுமாக அழிவுக்கு வருமா என்பது கேள்விக்குறியே.இந்த பிளாஸ்டிக் மாசுபாடு மனிதர்களுக்குக் கேட்டதோ இல்லையோ பறவைகளுக்கு தெளிவாகப் புரிந்துள்ளது. அதனால்தான் மனிதர் கூட செய்யத் தவறிய செயலை காகம் செய்துள்ளது.