தூத்துக்குடி அருகே குளத்தில் சாகுபடி செய்யப்படும் வெள்ளரிகளுக்கு போதிய வரவேற்பு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் உள்ள செய்துங்கநல்லூரில் பிரத்யேக குளத்தில் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது. குளத்தில் நீரின்றி வறட்சி நிலையை அடையும்போது, அதனை பயன்படுத்தி இச்சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு விளையும் வெள்ளரிகளை அதிகாலை 5 மணி முதல் விவசாயிகள் பறிக்க துவங்குகின்றனர். இந்த வெள்ளரிகளை தூத்துக்குடி மட்டுமின்றி நெல்லை, குமரி ஆகிய பிற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வாங்கிச் செல்கின்றனர்.