Mnadu News

மும்பையுடனான போட்டியில் தோனிக்கு ஓய்வா…

தோனியை போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக்கச் சொல்வது மிகவும் கடினமானது என்று சென்னை அணியின் பயிற்சியாளர் மைக் ஹசி கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி.

இதனால் ஏப்ரல் 17-ம் தேதி நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பங்கேற்கவில்லை. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னா தலைமை தாங்கினார். அந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது.

சென்னை அணி என்பது அவர் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. சிஎஸ்கே அணியின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என்று நினைப்பார். அதனால் அவரை போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக்கச் சொல்வது மிகவும் கடினமான ஒன்று’ என்று கூறியுள்ளார்.

மும்பை – சென்னை அணிகள் போதும் போட்டி சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று பழி தீர்க்க சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this post with your friends