சென்னை வடபழனியில் கடந்த மாதம் நடைபெற்ற இயக்குனர் சங்க பொதுக்குழுவில், சங்கத்தின் தலைவராக இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதன் சங்கடங்களை தான் உணர்ந்துள்ளதாகவும், ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்வு செய்வதற்கு வசதியாக தனது பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு மூத்த இயக்குனராக எதிர்காலத்தில் சங்க உறுப்பினர்களுக்கு தனது வழிகாட்டுதலும், பேரன்பும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.