Mnadu News

நீட் தேர்வு வர முக்கிய காரணமே திமுக காங்கிரஸ் தான் – மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி நபார்டு வங்கியின் 38 ஆவது நிறுவன நாள் சென்னை ராயபேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்கு முன்னதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் நீட் தேவையில்லை என்பது தான் தங்களின் நிலைப்பாடு, என்றும் நீட் வர முக்கிய அடித்தளமாக இருந்தவர்கள் திமுக காங்கிரஸ் தான், என அவர் குற்றம்சாட்டினார்.மக்களுக்கு நேரடியாக பயன் தரும் வகையில் பொருளாதரம் முன்னேற்றம் பெற கடந்த 38 ஆண்டுகளாக நபார்டு வங்கி செய்து வருகிறது என அவர் தெரிவித்தார்.

Share this post with your friends