Mnadu News

முதல் முறையாக இரண்டாம் பாகம் எடுக்கும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா ?

தமிழ் திரையுலகில் குறைந்த படங்களை மட்டுமே எடுத்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த இயக்குனர்கள் ஒருசிலரே அந்த வரிசையில் இயக்குனர் மிஷ்கின்னும் ஒருவர் .ஆரம்ப காலத்தில் துணை இயக்குனராக இருந்த இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இவர் எடுத்த முதல் படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .

இவர் இதுவரை எடுத்த அணைத்து படங்களும் சற்று வித்யாசமான கதைத்திறனை கொண்டிருக்கும் . அந்த படங்கள் அனைத்தும் வெற்றிடடைந்து இவருக்கும் இவர் படங்களுக்கும் ரசிகர்கள் அதிகமாகிகொன்டே இருக்கின்றனர் .இவர் கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு விஷாலை வைத்து ‘துப்பறிவாளன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார் . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது சைக்கோ என்ற படத்தை இயக்கி வரும் மிஷ்கின் இந்த படம் முடிவடைந்ததும் மீண்டும் நடிகர் விஷாலை கதாநாயகனாக வைத்து துப்பறிவாளன் படத்தின் 2 ஆம் பாகத்தை எடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது . இயக்குனர் மிஷ்கின் இதுவரை அவர் எடுத்த எந்த படங்களையும் 2 ஆம் பாகமாக எடுத்தது இல்லை துப்பறிவாளன் 2
படமே இவருக்கு முதல் இரண்டாம்பாகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends