மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இந்நிலையில் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் பொருளாளர் துரைமுருகன், வேலூர் அரக்கோணம் மட்டுமில்லாமல் தமிழகம் மற்றும் புதுவையையும் சேர்த்து 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் எனக் கூறினார்.
மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த துரைமுருகனின் மகன் தான் வெற்றி பெற்றால் வேலூரில் பலமுக்கியத் திட்டங்களைக் கொண்டு வருவேன் என பொத்தாம் பொதுவாக பதிலளித்தார்.