Mnadu News

தேர்தலில் அனுதாபம் ஏற்படுத்த துரைமுருகன் நடிக்கிறார்-அமைச்சர் ஜெயக்குமார்

வேலூர் மக்களவை தேர்தலையொட்டி இன்று அதிமுக தேர்தல் ஆலோசனை கூட்டம் இன்று வேலூர் அண்ணாசாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.வீரமணி, நிலோபர் கபில், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், உதயகுமார், சிவி.சண்முகம், ராஜலட்சுமி, வெல்லமண்டி நடராஜன் உட்பட 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பங்கேற்ன்னர். கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், இது ஒரு மெகா கூட்டணி இந்த கூட்டணியை கண்டு திமுக தோல்வியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என்று கூறினார். குறிப்பாக, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை மக்கள் துரைமுருகனுக்கு பாடம் புகட்ட தயாராகிவிட்டார்கள். ஏனென்றால் ,இன்று துரைமுருகன் வெளியே தெரிவதற்கும் படிப்பதற்கும் உதவியது எம்ஜிஆர் தான் அவருக்கு துரோகம் செய்தவர் தான் துரைமுருகன் என்று குறிப்பிட்டார் .

வேலூர் மக்கள் அவர்கள் சரியான நேரத்தை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாடம் புகட்டுவார்கள் என்றும் குறிப்பிட்டார். அதிமுக மாபெரும் வெற்றியை பெறும் ஏசி.சண்முகம் எளிதில் பழகக்கூடியவர் துரைமுருகன் மக்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்க வில்லை எனவே வேலூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். சி.சண்முகம் வெற்றி பெறுவார் .

ஒரு தோல்விக்குப் பிறகுதான் மாபெரும் வெற்றி கிடைக்கும் அந்த வெற்றி வேலூரின் சரித்திரத்தில் எழுதப்படும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டு நாங்கள் வெற்றி பெற்றால் தான் எல்லாம் கிடைக்கும் என்று திமுக வேட்பாளர் கூறுவது அவர்களின் சந்தர்ப்பவாதத்தை காட்டுகிறது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் நாங்கள் வெற்றி பெற்றால் தான் மக்களுக்கு எல்லாம் கிடைக்கும் இது பச்சைக் குழந்தையை கேட்டால் கூட தெரியும் ஆனால் இப்படி பச்சைப் பொய் பேசக்கூடாது துரைமுருகன் வேலூர் மாவட்ட நலன்களை காற்றில் பறக்கவிட்டார்” என்று குறிப்பிட்டார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் ,தேர்தலில் அனுதாபம் ஏற்படுத்த துரைமுருகன் நடிக்கிறார். அவர் ஒரு சிறந்த நடிகர். அவர் ஆஸ்கார் விருதுக்கு முயற்சி செய்கிறார் என வேலூரில் நடந்த அதிமுக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Share this post with your friends