சென்னை கே.கே.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தேமுதிக தயாராக உள்ளது என தெரிவித்தார். மேலும் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், கல்வியை அரசியல் ஆக்கிவிட்டதாக குற்றம் சாற்றினார் .
இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தான் புதிய கல்விக் கொள்கை அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தெரிவித்த பிரேமலதா, வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என கூறினார்.