கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி நாமக்கல்லில் கடந்த இரண்டு நாட்களில் முட்டை விலை 28 காசுகள் குறைந்து 3 ரூபாய் 40 காசுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது.
பண்டிகைகள் மற்றும் தொடர் மழை காரணமாக நாமக்கல் மண்டலத்தில் 10 சதவீத முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாகவும், கனமழையால் கேரளாவிற்கு அனுப்ப வேண்டிய சுமார் 1 கோடி முட்டைகள் அனுப்ப முடியவில்லை என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.முட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் தொடர்ந்து அதன் விலையும் குறைய வாய்ப்புள்ளதாகவும் கோழிப்பண்ணையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.