சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது,திமுக மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது, தற்போது எங்கள் பக்கம் பழியை திருப்பிவிடுகிறார்கள் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
எட்டு வழிச்சாலை என்பது மாநில அரசின் திட்டமல்ல மத்திய அரசின் திட்டம்; 8 வழிச்சாலை திட்டத்தால் 70 கிலோ மீட்டர் பயண தூரம் குறையும் எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த திட்டம் வந்தால் அரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்றுதான் எதிர்க்கின்றனர் எனவும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார் .மேலும் தேர்தல் முடிவு குறித்து தினகரன் அவர் கூறுகையில் ,தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன எனவும் தனக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததால் வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார் .