Mnadu News

அவசரமாக தரையிறங்கிய விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து

ரஷியாவின் பிராந்தியத்தில் உள்ள நில்நியான்கார்ஸ்க் நகர விமான நிலையத்தில் இருந்து பிராந்திய தலைநகர் யூலன்-ஊடேவுக்கு நேற்று அதிகாலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.அந்த விமானத்தில் 43 பயணிகள் உள்பட 48 பேர் பயணித்தனர் .

விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென ஒரு என்ஜின் செயலிழந்தது. இதையடுத்து உடனடியாக விமானத்தை நில்நியான்கார்ஸ்க் விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டு. அங்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஓடுபாதையில் இருந்து சறுக்கி 100 மீட்டர் தூரத்துக்கு சென்ற விமானம், அங்கு உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்தது. விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இந்த கோர விபத்தில் விமானி மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் என 2 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More