Mnadu News

தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற வலியுறுத்தல் -மு.க.ஸ்டாலின்

தமிழகத்திற்குரிய காவிரி நதிநீரைப் பெற்று வருகிற ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க தமிழக அரசை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.ஜூனிலிருந்து வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு குறித்த அறிக்கையை முன்கூட்டியே காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவிடம் தமிழக அரசு கொடுத்திருக்க வேண்டும் என்றும், அறிக்கையின் அடிப்படையில் ஜூன் முதல் நாள் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழகத்திற்குரிய 177.25 டி.எம்.சி நீரை ஒவ்வொரு மாதமும் எவ்வளவு டி.எம்.சி. வீதம் விடுவிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்து விட்டதா என்பதற்கும் பதில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More