தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி மீது முறைகேடு புகார் கூறி, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று, காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி கராத்தே தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சைதாப்பேட்டை சின்னமலையில் ராஜீவ் சிலைக்கு, மாலை அணிவித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், கே எஸ் அழகிரி கல்லூரி நடத்தி வருவதாகவும், அதில் முறைகேடு புகார் எழுந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.