Mnadu News

தண்டையார்பேட்டை மாநகரப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு

தண்டையார்பேட்டை பேருந்து நிலையம் அருகே மாநகரப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருவொற்றியூரில் இருந்து செங்குன்றம் வரை செல்லக்கூடிய 157 என் கொண்ட மாநகரப் பேருந்து தண்டையார்பேட்டையில் சென்று கொண்டிருக்கும்போது பயனாளி ஒருவர் பேருந்தின் பின்புறம் கண்ணாடியில் கல் அடித்து உதைத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மாநகர போக்குவரத்து ஊழியர்கள் சம்பளம் வராத காரணத்தினால் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குறைந்த பேருந்துகளை ஓடும் நிலையில் தண்டையார்பேட்டையில் பேருந்தை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .அப்பேருந்தின் நடத்துனர் கல்லெறிந்தவரை பிடித்து அருகில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையில் ஒப்படைத்தார் .பின்னர் காவல் துறையினர் விசாரிக்கும் பொழுது 50 வயது கொண்ட தங்கதுரை என்ற அந்த நபர் தான் கொத்தனாராக வேலை பார்ப்பதாகவும் அந்த பேருந்தை நிறுத்த சொல்லி இடத்தில் நிறுத்தாததால் ஆத்திரமடைந்த அவர் பேருந்தின் பின்புற கண்ணாடியை அடித்து விட்டதாக கூறினார் .புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More