கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திருப்பூருக்கு நேற்று சென்ற தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்று, பின்புறத்தில் 4 டயர்களுக்கு பதிலாக 2 டயர்கள் மட்டுமே பொருத்தப்பட்டு இயக்கப்பட்டுள்ளது.
இதனை அந்த பேருந்தின் பின்னால் காரில் சென்ற ஒரு நபர் வீடியோவாக எடுத்து வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்ததையடுத்து, அது வைரலாகி வருகிறது.
பொதுமக்கள் பயன்படுத்தும் அரசு பேருந்து, பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்பட்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் ap புகார் அளித்துள்ளனர்.