Mnadu News

திரைப்படத் துறையை காப்பாற்ற அரசு தவறுகிறது – ஆர்.கே. செல்வமணி

சென்னையில் ‘ஐ.ஆர்.8’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு இயக்குனர் ஆர்.கே. செல்வமணி கூறியதாவது “தற்போதைய தலைமை சிறப்பாக இருந்தாலும், செயல்பாடுகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டி இருக்கிறது. இன்னும் ஒரு நல்ல தலைமை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேவைப்படுகிறது” என்று அவர் கூறினார். மேலும் விவசாயத்தை போலவே சினிமாவும் அழிவை நோக்கி செல்கிறது என்றும் அவர் கூறினார்.

Share this post with your friends