Mnadu News

பானி புயல் 30-ம் தேதி மாலை வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும்- வானிலை ஆய்வு மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ இந்திய பெருங்கடலை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் பானி புயலாக வலுப்பெறும். இந்த புயலானது இலங்கை கடல் பகுதியில் வடமேற்காக நகரக் கூடும். ஏப்ரல்-30 ம் தேதி மாலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை பானி புயல் நெருங்கும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு தென்கிழக்கே 1210 கி.மீட்டரில் நிலை கொண்டுள்ளது. ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் பரவலமாக கனமழை பெய்யக் கூடும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share this post with your friends