Mnadu News

விடுதலை தொடர்பாக நளினி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது-உயர்நீதிமன்றம்

பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடுத்துள்ளார் .
நளினியின் கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பரோலை நீட்டிக்க கோரி நளினி தொடர்ந்த மனு தொடர்பாக நாளை மறுநாள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .ஜூலை 25ம் தேதியிலிருந்து ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது .மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கூறியிருப்பதாவது,விடுதலை தொடர்பாக நளினி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்ததாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏழு பேர் விடுதலை தொடர்பாக அளித்த மனுவை பரிசீலிக்க கோரி நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.

Share this post with your friends