Mnadu News

அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாடு-கமல்

தமிழகத்தில் கோடை காலம் என்பதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார் . திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து, இரண்டாவது நாளான பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் கூறியிருப்பதாவது , தமிழகம் வறண்ட பாலைவன பூமி போல் இருப்பதாகவும் , இங்கு கொண்டு வர முடியாதது போல் ஆட்சியாளர்கள் நடிப்பதாக தெரிவித்தார். மேலும் ,தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு வீடு குழாய் அமைத்து தண்ணீர் தர முடியும் என்றும் அவர் கூறினார்.

Share this post with your friends