Mnadu News

பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்… இந்திய ராணுவம் பதிலடி…

ஜம்மு- காஷ்மீர் எல்லையில், போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி குடுத்து வருகிறது .

ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுக்கு உட்பட்ட மன்கோடே, கிருஷ்ணா காதி செக்டார், நவ்ஷேரா உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியது.

போர் ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலுக்கு பீரங்கி மற்றும் துப்பாக்கிகளை கொண்டு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை வீரர்கள் யாரேனும் உயிரிழந்தார்களா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Share this post with your friends