‘கத சொல்லப் போறோம்’, ‘குலேபகாவலி’, ‘காத்தாடி’ ஆகிய படங்களை இயக்கியவர் கல்யாண். இவர் தற்போது ஜோதிகாவை வைத்து ‘ஜாக்பாட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து, சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார் கல்யாண்.
நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படத்தில், ஹன்சிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே கல்யாண் இயக்கத்தில் ‘குலேபகாவலி’ படத்தில் நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.