இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15ம் தேதி திரைக்கு வந்த படம் ‘நெடுநல்வாடை’. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், 26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்ட “ஐ.எப்.எ” சர்வதேச திரைப்பட விழாவில் ‘நெடுநல்வாடை’ படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இதனையடுத்து படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.