Mnadu News

சென்னையில் மேகமூட்டம் …மழை வரவாய்ப்பு உள்ளதா …

சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாகவே காணப்படுகிறது.ஃபோனி புயல் தமிழகத்தைத் தாக்குவதற்கான வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை மையம் நேற்றே தெரிவித்திருந்தது.

ஃபோனி புயல் குறித்து மண்டல வானிலை மைய துணை இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “ஃபோனி புயலால் நேரடியான எவ்வித பாதிப்பும் தமிழகத்துக்கு ஏற்படாது. ஆனால், வட தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனக் கூறியுள்ளார்.

சென்னையைப் பொறுத்தவரையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டமாகவே காணப்படுகிறது. ஓரிரு இடங்களில் லேசான மழைச்சாரலுக்கும் வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் கடந்த சில நாள்களாகவே காணப்பட்ட அதிக வெப்பம் தற்போது சற்றுத் தணிந்தே காணப்படுகிறது. தமிழகக் கடலோரப் பகுதிகளிலிருந்து 300 கி.மீ தொலைவில் நகர்ந்துகொண்டிருக்கும் புயல் ஏப்ரல் 30-ம் தேதிக்குப் பின்னர் திசை மாறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends