இந்துக் கடவுள் கிருஷ்ணரை அவதூறாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாக அவருக்கு எதிராக நாடு முழுவதும் இந்து அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கி.வீரமணிக்கு எதிராக பாஜக நிர்வாகி அசோக் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அசோக்கின் மனுவை விசாரித்த நீதிபதிகள் பா.ஜ.க. நிர்வாகி அசோக்கின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று அவருடைய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.