Mnadu News

காஞ்சனா 3 பட நடிகைக்கு பாலியல் தொல்லை – ஒருவர் கைது

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா 3’ படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஜானே கட்டாரியா பணியாற்றியுள்ளார். இவர் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி நடிப்பு கற்றுக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளம் மூலம் நண்பராக அறிமுகமான விளம்பர மாடல் ரூபேஷ் குமார், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

விளம்பர படங்களில் நடிக்க வைப்பதாக கூறி பல புகைப்படங்கள் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை மார்ஃபிங் செய்து வெளியிடுவதாக மிரட்டி ஜானே கட்டாரியாவை பாலியலுக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து ஜானே கட்டாரியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய காவல்துறையினர் ரூபேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Share this post with your friends