Mnadu News

கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தகுதி நீக்கம் சபாநாயகர் எப்படி முடிவெடுப்பது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா, தகுதி நீக்கம் விவகாரத்தில் சபாநாயகர் எப்படி முடிவெடுக்கிறார் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார் .மேலும் கர்நாடக எம்.எல்.ஏக்கள் கூறுகையில் , தங்களது விருப்பத்திற்கு உட்பட்டு ராஜினாமா கடிதம் கொடுக்கிறோம்,தங்களது விருப்பத்திற்கு மாறாக செயல்பட சொல்ல சபாநாயகருக்கு உரிமை கிடையாது எனவும் எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.ஒருவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தனிப்பட்ட காரணங்கள் ஆயிரம் இருக்கும் எனவும் எம்.எல்.ஏ.க்கள் வாதாடினர்.இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.

Share this post with your friends