மகா விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த திருநாள் கிருஷ்ண ஜெயந்தியாக இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், உலகில் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகி, மக்கள் அனைவரும் எல்லா நலன்களோடும், வளங்களோடும் வாழ்ந்திட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதே போல அதிமுக தலைமைக் கழகம் சார்பிலும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஇஅதிமுக சார்பில், கழக ஒருங்கிணைப்பாளர்களின் "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" திருநாள் வாழ்த்து செய்தி.. #KrishnaJayanti #AIADMK pic.twitter.com/v4PFYDNLNC
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 22, 2019