Mnadu News

ப.சிதம்பரம் கைது குறித்து கிரண்பேடியின் கருத்து

தலைமை பதவி என்பது பதவி கிடையாது, அது ஒரு பொறுப்பு என்றும், பெரிய பொறுப்புகளை வைத்துக் கொண்டு தனது சொந்த கணக்குளை தொடங்க கூடாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த கிரண் பேடியிடம் ப.சிதம்பரம் கைது குறித்து கேட்டப் போது இவ்வாறு அவர் பதிலளித்தார்.

உரிய ஆவணங்களுடன் தான் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர் என்று தெரிவித்த கிரண் பேடி, புதுச்சேரி அரசு நிர்வாகத்தின் அன்றாட நடவடிக்கைளில் துணை நிலை ஆளுநர் தலையிட கூடாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது குறித்து கேட்டதற்கு, வழக்கு விசாரணையில் உள்ளது. செப்டம்பர் 4ந்தேதி மனுதாரரிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது, முடிவு என்ன வருகின்றது என்பதை பொறுத்திருந்து பார்போம் என தெரிவித்தார்.

Share this post with your friends