Mnadu News

தோனிக்கு மனம் உருகி கோரிக்கை விடுத்த லதா மங்கேஷ்கர்…

நேற்று நடைபெற்ற உலக கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணியானது இறுதி போட்டிக்கு முன்னேறியது.இந்தியாவின் தோல்வி குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகினார்கள் .

இந்நிலையில் ,தோணி ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.இது குறித்து,பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,நீங்கள் ஓய்வு பெற விரும்புவதாக நான் கேள்விப்பட்டேன். தயவுசெய்து அப்படி செய்யாதீர்கள். இந்திய அணிக்கு நீங்கள் தேவை. ஓய்வு பெறுவதை பற்றி யோசிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறேன் என மனம் உருக ஒரு கிரிக்கெட் ரசிகையாக பதிவிட்டிருந்தார் .

Share this post with your friends