Mnadu News

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தை – வியாபாரிகள் பெரும் கவலை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தைக்கு திண்டுக்கல், தேனி, கம்பம், போடி, தாராபுரம், பழனி, காங்கேயம், வெள்ளக்கோவில், கரூர் ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து விற்பனை செய்வதும், தங்களுக்குத் தேவையான கால்நடைகளை வாங்கிச் செல்வதும் வழக்கம். அதே போல் கேரள மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்து கால்நடைகள் வாங்கிச் செல்லப்படுகின்றன. இந்நிலையில் வறட்சி காரணமாக கால்நடைகளுக்குத் தேவையான தீவனம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதிக வரத்து காரணமாக கால்நடைகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.

Share this post with your friends