Mnadu News

சாந்தகுமார் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு…

சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள சரவணபவன் அதிபர் ராஜகோபால் சரணடைய கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்துள்ளது.சரணடைய வேண்டிய நிலையில் உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் புதிய மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நிலையை காரணம் காட்டி தண்டனை காலம் முழுவதையும் மருத்துவமனையிலேயே கழிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில் ,சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உடனே சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜகோபால் சரணடைவதற்காக ஆம்புலன்ஸில் சென்னை குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்தடைந்தனனர்.ராஜகோபாலை சக்கர நாற்காலியில் நீதிமன்ற அறைக்கு அழைத்து வர நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் .இதனையடுத்து ,சாந்தகுமார் கொலை வழக்கில் இன்று ஆம்புலன்சில் வந்து ஆஜரானார் ஜனார்த்தனன்.நீதிமன்றத்தில் ஆஜரான அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.சாந்தகுமார் கொலை வழக்கில் 2 வருட சிறைத்தண்டனை பெற்றவர் ஜனார்த்தனன் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More