ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் திறமையானவர்களுக்கு இஸ்ரோவில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சிவன் தெரிவித்துள்ளார்.இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சந்திராயன் 2 விண்கலம் சந்திரனை சுற்றிய புவிவட்ட பாதையில் சுற்றி வருவதாகவும் வரும் செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 1.40-க்கு தரையிறங்க தொடங்கும் என்றும் 1.55 மணி அளவில் முழுவதுமாக நிலவில் தரையிறங்கும் என்றும்
அவர் தெரிவித்தார்.
மேலும் சந்திராயன் நிலவில் தரையிறங்கும் போது அதன் வேகத்தை குறைப்பது சவாலாக இருக்கும் என்றும் சிவன் தெரிவித்தார்.தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் போது பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அவர் வருகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்றும் சிவன் தெரிவித்தார்.மேலும், ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் திறமையானவர்களுக்கு இஸ்ரோவில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சிவன் தெரிவித்துள்ளார்.