Mnadu News

திமுக ஆட்சியில் பால் விலை மூன்றாவது முறையாக உயர்ந்துள்ளது-மு.க ஸ்டாலின்

ஒண்டி வீரன் 248-வது நினைவு நாளையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டி வீரன் மணிமண்டபத்தில் ஒண்டி வீரன் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில்,ஆங்கிலேய தளபதியை போராடி வெற்றி கண்டவர் ஒண்டி வீரன். அதிமுக ஆட்சியில் பால் விலை மூன்றாவது முறையாக உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை உயர்வால், பால் விலை உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார். பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

Share this post with your friends