சூலூர் ஒட்டபிடாரம் அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்ற நிலையில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். மேலும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனையை அதிமுக அரசு விரைவில் நிறைவேற்றி கொடுக்கும் என்று மக்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு கொடுத்தார்.
மு.க.ஸ்டாலின் 2 நாள் பிரச்சாரத்தை 3 நாட்களாக அதிகரித்ததில் இருந்து அவருடைய பயம் வெளிப்படுகிறது என திமுகவின் தோல்விக் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையாக சாடி பேசியுள்ளார்.