Mnadu News

இமாச்சலபிரதேசத்தில் சிக்கி தவித்த நடிகை மீட்பு

நடிகை மஞ்சுவாரியர் உட்பட மலையாள படக்குழுவினர் 30 பேர் இமாச்சலபிரதேசத்தில் சிக்கி தவித்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. படப்பிடிப்புக்காக சத்ரா என்ற குக்கிராமத்தில், நடிகை மஞ்சு வாரியர் உள்பட படக்குழுவினர் 30 பேர் முகாமிட்டிருந்தனர்.

Image result for மஞ்சு வாரியர்

இந்நிலையில் கனமழை மற்றும் நிலச்சரிவால் கிராமத்துடனான சாலை துண்டிக்கப்பட்டு, தொலை தொடர்பு வசதியும் செயலிழந்தது. தகவலறிந்த அவரது குடும்பத்தினர் வைத்த கோரிக்கையை அடுத்து, மாநில அரசு மீட்பு முயற்சியில் இறங்கியது. இந்நிலையில் படக்குழுவினர் உட்பட அப்பகுதி மக்கள் அனைவரும் மீட்கப்பட்டதாக இமாச்சலபிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends