Mnadu News

பிரதமர் பதவியேற்பு விழாவையொட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் நட்பு நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான விவிஐபிகள் கலந்துகொள்ள உள்ளதால், டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பிரதமர் மோடி பதவியேற்பு விழா, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாக்களிலேயே மிகப்பெரிய விழா என வர்ணிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு டெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பிரதமர் மோடியும், வெளிநாட்டு தலைவர்களும் பதவியேற்பு விழா நடைபெறும் இடத்திற்கு வரும் வழியில் 2 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் பல இடங்களில் மாலை 4 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More