‘துப்பாக்கி’, ‘அஞ்சான்’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இந்தி நடிகர் வித்யூத் ஜம்வால். இவர் தற்போது நாயகனாக ‘பவர்’ என்று தலைப்பிட்டுள்ள ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.
மும்பையை மையப்படுத்திய கேங்ஸ்டர் கதையாக உருவாகிவரும் இந்த படத்தில், வித்யூத் ஜம்வால் தலைமறைவு தாதாவாக இருக்கும் தன் அப்பாவின் இடத்தைக் கைப்பற்றப் போராடும் தாதாவாக நடிக்கிறார். இந்நிலையில், வித்யூத் ஜம்வால் ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் கேங்க்ஸ்டராக இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியிடபடும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர் .