Mnadu News

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொடும்பபட்டியில் பழமையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 21 ம் தேதி பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துமாரியம்மன் திருத்தேரில் வீதி உலா வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் முன்பு அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில் அலங்கரிக்கப்பட்ட முத்து மாரியம்மன் கொண்டு வந்து வைக்கப்பட்ட பின்னர் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் தேர் நிலையில் இருந்து புறப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை பிடித்து இழுக்க, நிலையில் இருந்து புறப்பட்ட தேர் முக்கிய வீதிகளின் வழியாக மீண்டும் நிலையை வந்தடைந்தது. இந்த தேரோட்ட நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Share this post with your friends