Mnadu News

போலீசார் போல வேடமிட்டு ஓடும் பேருந்தில் 98 லட்சம் ருபாய் பணத்தை திருடிய மர்ம நபர்கள்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு பேருந்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணித்த கோபிநாத் என்பவர் கையில் 98 லட்சம் ருபாய் பணத்தை வைத்து பயணம் மேற்கொண்டார். அதை அறிந்த மர்மநபர்கள் போலீசார் போல வேஷமிட்டு ஓடும் பேருந்தை வழிமறித்து கையில் பணம் வைத்திருந்த கோபிநாத் என்பவரை கஞ்சா கடத்தும் கும்பல் என கைது செய்து அழைத்து சென்றனர்.

பின்னர் போலீசார் போல வேடமிட்ட  மர்ம கும்பல்   அந்த  நபரிடமிருந்த 98 லட்சம் ருபாய் பணத்தை பறிமுதல் செய்து பாதி வழியிலையே இறக்கி விட்டனர் . இந்த சம்பவத்தால் அந்த பகுதியை சுற்றிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது . இந்த வழக்கை விசாரிக்க போலீசார் தனிப்படை வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர் .

Share this post with your friends