Mnadu News

மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’ படக்குழுவினர்

இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘நாடோடிகள் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, திரைக்கு வர காத்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் சமுத்திரக்கனியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சமுத்திரகனி. அதன்படி, சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என தெரிவித்துள்ளார்.

Share this post with your friends