நாமக்கலில் குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன் நர்ஸ் அமுதா அவருடைய கணவர் ரவிச்சந்திரன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 4500 பிறப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டார். மேலும் இவ்வழக்கில் பலர் தொடர்புடையவர்களாக இருப்பார்கள் என்ற கருதும் நிலையில் மேலும் 3 பெண்களை குழந்தைகள் விற்பனை தொடர்பாக மேலும் ராசிபுரம் போலீஸார் கைது செய்தனர்.