Mnadu News

நீட் தேர்வு… மதுரையில் மாணவி பலி

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அபிராமம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் சந்தியா என்ற மாணவி நீட் தேர்வு எழுதுவதற்காக மதுரைக்குச் சென்றுள்ளார். தேர்வு எழுதும்போது மயக்கமடைந்திருக்கிறார். அங்கிருந்த ஆசிரியர்கள் அந்த மாணவிக்கு தண்ணீர் கொடுத்து சிறிது நேரத்தில் தேர்வெழுத அனுமதித்து இருக்கிறார்கள்.

தேர்வு எழுதிவிட்டு தந்தையுடன் பேருந்தில் சென்றபோது  மாணவி மீண்டும் மயக்கமடைந்திருக்கிறாள். இந்நிலையில் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் மாணவியை முனுசாமி சேர்த்துள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி மதுரை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சந்தியாவை சோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Share this post with your friends