தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பையடுத்து, இந்த படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற தலைப்பில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க இயக்குநர் பாலா இயக்கினார். ஆனால் படக்குழுவினரிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக படம் திரையிடுவது கைவிடப்பட்டது.
இதனையடுத்து கிரீஸய்யா இயக்கத்தில் புதிய படக்குழுவினருடன் ‘ஆதித்ய வர்மா’ என்ற தலைப்பில் தயாராகிவருகிறது. இந்நிலையில், மார்ச் மாதம் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு 65% நிறைவடைந்துள்ளதாகவும். தற்போது போர்ச்சுகல் நாட்டில் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.