Mnadu News

ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடி கைது.!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறிது நேரத்தில் அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வழக்கு முடிந்ததும் அவரை இந்தியா அழைத்து வருவதற்கான வேலைகளில் மத்திய அரசு ஈடுபடும். பஞ்சாபி நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன்பெற்ற நீரவ்  லண்டனில் தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share this post with your friends